Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தமிழ் வளர்ச்சி துறை சார்பில் போட்டி கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் போட்டி கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் போட்டி கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் போட்டி கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு

ADDED : அக் 16, 2025 01:32 AM


Google News
ஈரோடு, ஈரோட்டில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கல்லுாரி மாணவ, மாணவியருக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி நடந்தது.

கவிதை போட்டியில், சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லுாரி - அர்ஷியா சுல்தானா, ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லுாரி - தினேஷ், ஈரோடு சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லுாரி - செந்தமிழ் சஞ்சய் ஆகியோரும், கட்டுரை போட்டியில், சக்தி பாலிடெக்னிக் கல்லுாரி - சவுந்தர்யா, ஈரோடு ஸ்ரீவாசவி கல்வியியல் கல்லுாரி - ேஹமாமாலினி, ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரி - ரிஷிகா ஆகியோர் முதல், 3 பரிசுகளை வென்றனர்.

பேச்சு போட்டியில், அரச்சலுார் நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லுாரி - நந்தினிதேவி, பெருந்துறை பாரதியார் பல்கலை கழக விரிவாக்க மையம் - அமல்உன்னிகிருஷ்ணன், ஈரோடு சிக்கய்யா அரசு கலை அறிவியல் கல்லுாரி - கார்த்தி ஆகியோர் முதல், 3 பரிசுகளை வென்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல், 3 பரிசாக தலா, 10,000, 7,000, 5,000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us