ADDED : அக் 09, 2025 01:16 AM
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த ஈஸ்வரசெட்டிபாளையத்தில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. அப்பகுதி மக்கள், பல்வேறு கோரிக்கை சார்ந்த மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளித்தனர்.
மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, நேரில் ஆய்வு செய்தார். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. அப்போது குண்டடம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் சந்திரசேகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.


