Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பங்கு சந்தை முதலீடு: ரூ.2.75 கோடி மோசடி

பங்கு சந்தை முதலீடு: ரூ.2.75 கோடி மோசடி

பங்கு சந்தை முதலீடு: ரூ.2.75 கோடி மோசடி

பங்கு சந்தை முதலீடு: ரூ.2.75 கோடி மோசடி

ADDED : அக் 16, 2025 09:28 PM


Google News
ஈரோடு: ஷேர் மார்க்கெட் முதலீடு ஆசை காட்டி, 2.75 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.

ஈரோடு, வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்தவர் நரேஷ்குமார், 41; எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர். இவர், ஷேர் மார்க்கெட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது மொபைல்போனில் பேசிய நபர், 'ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும்; அதற்கு ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்' என, கூறியுள்ளார்.

இதை நம்பி செயலியை பதிவிறக்கம் செய்து, ஜூலை 9 முதல், நரேஷ்குமார் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். துவக்கத்தில் 5 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளார். ஒரு வாரத்துக்கு முன் வரை, 2.75 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில், செயலியில் முதலீடுடன் வருவாய், 9 கோடி ரூபாய் என காட்டியுள்ளது. பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

ஆவணங்கள் அனைத்தையும் சென்னை சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பி வைத்து, நரேஷ்குமாரையும் விசாரணைக்கு சென்னை அனுப்பி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us