ADDED : ஜூன் 14, 2024 07:00 AM
ரிஷிவந்தியம்: வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கான குறைகேட்பு சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
வாணாபுரம் தாலுகா அலுவலக செய்திக்குறிப்பு:
வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கான குறைகேட்பு சிறப்பு முகாம் நாளை 15ம் தேதி நடைபெற உள்ளது. காலை 10:00 முதல், மதியம் 1:00 மணி வரை நடைபெறும் இம்முகாமில் பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், முகவரி மாற்றம், கைபேசி எண் இணைத்தல், புகைப்படம் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று, பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.