Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சுவாமி தாலி திருட்டு; பெண் மீது வழக்கு

சுவாமி தாலி திருட்டு; பெண் மீது வழக்கு

சுவாமி தாலி திருட்டு; பெண் மீது வழக்கு

சுவாமி தாலி திருட்டு; பெண் மீது வழக்கு

ADDED : ஜூன் 13, 2024 09:48 PM


Google News
திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் கருவறை சுவாமியின் தாலியை திருடிய பெண் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

மணலுார்பேட்டை, பிரயோக வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 1ம் தேதி சுவாமி சன்னதியில், உற்சவமூர்த்தி தாயார் கழுத்தில் இருந்த இரண்டு கிராம் எடையுள்ள இரண்டு தாலி காணாமல் போனது.

இதுகுறித்த புகாரின் பேரில், மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், திருவண்ணாமலை மாவட்டம், கல் நகர், கம்மங்கொல்லை தெருவைச் சேர்ந்த ஏழுமலை மனைவி சங்கீதா, 45; என தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us