Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தீக்குளித்த பெண் சாவு

தீக்குளித்த பெண் சாவு

தீக்குளித்த பெண் சாவு

தீக்குளித்த பெண் சாவு

ADDED : ஜூன் 13, 2024 09:47 PM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே குடும்ப பிரச்னையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி பத்மாவதி, 31; இவர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

சில மாதங்களாக கணவன், மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு 8:00 மணியளவில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த பத்மாவதி உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

பலத்த தீக்காயமடைந்த அவர், சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7:00 மணியளவில் இறந்தார்.

புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us