ADDED : செப் 25, 2025 04:16 AM
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் சோனா,19; இவர், நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.இ., 2ம் ஆண்டு படிக்கிறார்.
கடந்த 22ம் தேதி வீட்டிலிருந்த கல்லுாரிக்கு புறப்பட்ட சோனா, பல மணி நேரம் ஆகியும் கல்லுாரிக்கு செல்லவில்லை.
இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் சோனா கிடைக்காததால், தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தந்தை செந்தில்குமார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.