Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

ADDED : மே 29, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில், 43 புகார் மனுக்கள் பெறப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில், பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீதான நடவடிக்கையில் திருப்தி இல்லாத புகார் மனுதாரர்கள், தீர்வுகள், முடிவு பெறாத புகார்கள் தொடர்பாக எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து, 43 புகார் மனுக்களை பெற்று விசாரணை செய்தார். தொடர்ந்து புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து உடனடியாக தீர்வு காண போலீசாருக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிடோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us