Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்தி குத்து; சகோதரர்கள் கைது

சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்தி குத்து; சகோதரர்கள் கைது

சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்தி குத்து; சகோதரர்கள் கைது

சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்தி குத்து; சகோதரர்கள் கைது

ADDED : செப் 24, 2025 06:32 AM


Google News
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே சொத்து தகராறில் பெண்ணை கத்தியால் குத்திய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா, 65; இவரது உறவினர் மணி. இருவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், மணி மகன்கள் சத்யராஜ், 24; முருகன், 34; மற்றும் முருகனின் மனைவி சின்னபொண்ணு ஆகியோர் நேற்று லலிதாவுடன் தகராறு செய்தனர். அப்போது, லலிதாவை கத்தியால் குத்தினர். பலத்த காயமடைந்த லலிதா திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் மணலுார்பேட்டை போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிந்து, சத்யராஜ், முருகனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us