Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலை விபத்தில் ஒருவர் பலி

சாலை விபத்தில் ஒருவர் பலி

சாலை விபத்தில் ஒருவர் பலி

சாலை விபத்தில் ஒருவர் பலி

ADDED : ஜூலை 24, 2024 11:07 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, மாந்தாங்கல் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர்,41. இவர், பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள கற்பூரம் கம்பெனியில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று, காலை 5:30 மணியளவில், 'ஹீரோ ஸ்பிளன்டர்' இருசக்கர வாகனத்தில், பணிக்கு சென்றார். அப்போது, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பாஸ்கர் விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us