ADDED : ஜூலை 24, 2024 11:07 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, மாந்தாங்கல் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர்,41. இவர், பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள கற்பூரம் கம்பெனியில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று, காலை 5:30 மணியளவில், 'ஹீரோ ஸ்பிளன்டர்' இருசக்கர வாகனத்தில், பணிக்கு சென்றார். அப்போது, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பாஸ்கர் விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.