Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஜே.சி.பி., ஆப்ரேட்டர் மயங்கி விழுந்து பலி

ஜே.சி.பி., ஆப்ரேட்டர் மயங்கி விழுந்து பலி

ஜே.சி.பி., ஆப்ரேட்டர் மயங்கி விழுந்து பலி

ஜே.சி.பி., ஆப்ரேட்டர் மயங்கி விழுந்து பலி

ADDED : ஜூலை 24, 2024 11:08 PM


Google News
ஸ்ரீபெரும்புதுார்:மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி, 36; ஜே.சி.பி., ஆபரேட்டர். ஒரகடத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஜே.சி.பி., ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மதியம் பணியில் இருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, மாத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஒரகடம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us