Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புதர் மண்டிய அங்கன்வாடி மையம் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி

புதர் மண்டிய அங்கன்வாடி மையம் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி

புதர் மண்டிய அங்கன்வாடி மையம் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி

புதர் மண்டிய அங்கன்வாடி மையம் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி

ADDED : ஜூலை 26, 2024 02:03 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, தாட்டித்தோப்பு பகுதியில் எண்.1 அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்றுவருகின்றனர்.

அங்கன்வாடி மையம் அமைந்துள்ள பகுதியை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், அங்கன்வாடி மையத்திற்கு பின்புறம், செடி, கொடிகள் புதர்போலமண்டியுள்ளது.

புதரில் இருந்து, பாம்பு, பூரான், விஷப்பூச்சி உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அங்கன்வாடி மையத்திற்குள் நுழையும் சூழல் உள்ளது. இதனால், அங்கன்வாடியில் பயிலும் குழந்தை களின் பாதுகாப்புகேள்விக்குறியாகிஉள்ளது.

எனவே, அங்கன்வாடி மையத்தின் பின்புறம் மண்டி கிடக்கும் புதர்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இங்கு பயிலும் குழந்தைகளின் பெற்றோர்வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us