/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பாலுசெட்டிசத்திரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை பாலுசெட்டிசத்திரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை
பாலுசெட்டிசத்திரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை
பாலுசெட்டிசத்திரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை
பாலுசெட்டிசத்திரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை
ADDED : செப் 26, 2025 04:04 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி மதுரா பாலுசெட்டிசத்திரம் பிரதான சாலையில், போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று அகற்றினர்.
காஞ்சிபுரம் - வேலுார் சாலையில், திருப்புட்குழி மதுரா பாலுசெட்டி சத்திரம் உள்ளது. இங்குள்ள பிரதான சாலையில் வங்கி, காய்கறி, பலசரக்கு, ஹோம் அப்ளையன்ஸ், உணவகம் என பல்வேறு கடைகள் உள்ளன.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் உள்ள கடைக்காரர்கள் தங்களது கடையை, சாலையை ஆக்கிரமித்து விரிவாக்கம் செய்து இருந்தனர்.
இதனால், சாலையின் அகலம் வெகுவாக குறைந்துள்ளதால், சாலையோரம் நடந்து செல்ல வேண்டிய பாதசாரிகள், சாலையின் மையப் பகுதியில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.
எனவே, திருப்புட்குழி மதுரா பாலுசெட்டிசத்திரத்தில் உள்ள பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.
இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவையடுத்து, காஞ்சிபுரம் உபகோட்டம், நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில், திருப்புட்குழி மதுரா பாலுசெட்டிசத்திரத்தில் பிரதான சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது.