Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாவடி சேவை உற்சவம்

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாவடி சேவை உற்சவம்

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாவடி சேவை உற்சவம்

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாவடி சேவை உற்சவம்

ADDED : ஜன 30, 2024 09:59 PM


Google News
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் அடுத்த, பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், தைப்பூச திருவிழா, கடந்த 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.

ஐந்தாம் நாள் உற்சவமான, ஜன., 21ல் திருக்கல்யாண உற்சவமும், ஏழாம் உற்சவமான ஜன., 23ல் தேரோட்டமும், ஒன்பதாம் நாள் உற்சவமான, ஜன., 25ல், 63 நாயன்மார்கள் உற்சவமும் விமரிசையாக நடந்தது.

இதில், 10ம் நாள் பிரபல திருவிழாவான, 22 ஊர் சுவாமிகள் செய்யாற்றில் எழுந்தருளும் தைப்பூச ஆற்று திருவிழா கடந்த 26ல் விமரிசையாக நடந்தது.

தைப்பூச விழாவின், 13ம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் இரவு, மாவடி சேவை உற்சவம் நடந்தது. இதில், பட்டுவதனாம்பிகையுடன், பிரம்மபுரீஸ்வரர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us