Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஆரியபெரும்பாக்கத்தில் விபத்து அபாயம்

சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஆரியபெரும்பாக்கத்தில் விபத்து அபாயம்

சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஆரியபெரும்பாக்கத்தில் விபத்து அபாயம்

சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஆரியபெரும்பாக்கத்தில் விபத்து அபாயம்

ADDED : மார் 17, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
ஆரியபெரும்பாக்கம்:காஞ்சிபுரம் ஒன்றியம், ஆரியபெரும்பாக்கம் பிரதான சாலை வழியாக, கூரம், வதியூர், திம்மசமுத்திரம், கீழம்பி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையோரம், மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

போதுமான மின்விளக்கு வசதி இல்லாத அப்பகுதியில் இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போதும், நிலைதடுமாறுகின்றனர்.

சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், ஆரியபெரும்பாக்கம் சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் மண் அணைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us