Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ எஸ்.பி., ஆபீஸ் முன் விஷம் குடித்த வாலிபர்

எஸ்.பி., ஆபீஸ் முன் விஷம் குடித்த வாலிபர்

எஸ்.பி., ஆபீஸ் முன் விஷம் குடித்த வாலிபர்

எஸ்.பி., ஆபீஸ் முன் விஷம் குடித்த வாலிபர்

ADDED : மார் 25, 2025 08:00 AM


Google News
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 29, இவர், சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

கடந்தாண்டு அக்., 30ம் தேதி வழக்கம்போல வேலைக்கு சென்று, இரவு 9:30 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, பக்கத்து ஊரான முத்துவேடு கிராமத்தில் இவருக்கு சொந்தமான கழனியை பார்க்கச் சென்றுள்ளார்.

அங்கு மணல் கடத்தல் தொடர்பாக, அங்கிருந்தவர்களை பெருமாள் கேட்டுள்ளார். இதனால், பெருமாளுக்கும், அங்கிருந்த வர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

அதன்பின், முத்துவேடு கிராமத்தைச் சேர்ந்த விக்கி என்பவர், பெருமாளுக்கு போன் செய்து நேரில் வர அழைப்பு விடுத்துள்ளார். இதனால், பெருமாள், அவரது அண்ணன் வெங்கடேசன், தாய் தெய்வானை, அக்கா அன்னக்கிளி ஆகிய நான்கு பேர் சென்றுள்ளனர்.

அங்கிருந்த விக்கி, அபிஷேக், பிரசன்னா, அசோக், ஆபாவாணன் உள்ளிட்ட பலர், பெருமாளை தலையில் வெட்டியதோடு, அவரது சகோதரர் வெங்கடேசன் என்பவரை, அந்த கும்பல் கட்டையால் தாக்கியுள்ளது. இதில், இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, பாலுசெட்டிச்சத்திரம் போலீசார், விக்கி, அபிஷேக், பிரசன்னா, அசோக், ஆபாவாணன் ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து, மூவரை கைது செய்தனர்.

அதேசமயம், தலையில் வெட்டப்பட்ட பெருமாள் மற்றும் அவரது தாய், சகோதரர், அக்கா ஆகிய நான்கு பேர்மீதும் போலீசார்வழக்குப்பதிந்து கைதுசெய்தனர்.

இந்த விவகாரத்தில், தங்கள் குடும்பத்தின் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், தங்களை தாக்கிய நபர்கள்மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கலெக்டர் அலுவலகத்தில், பெருமாள் தன் தாய், அக்கா, சகோதரனுடன் கடந்த மாதம் தர்ணா போராட்டமும் நடத்தினார்.

தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை இல்லை என, காஞ்சிபுரம் எஸ்.பி., அலுவலக வாசலில், பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் வெங்கடேசன்ஈடுபட்டார்.

அங்கிருந்த போலீசார், உடனடியாக, ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us