Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ நாய்களுடன் நீச்சல் அடித்தவர் ஆற்றில் மூழ்கி பலி

நாய்களுடன் நீச்சல் அடித்தவர் ஆற்றில் மூழ்கி பலி

நாய்களுடன் நீச்சல் அடித்தவர் ஆற்றில் மூழ்கி பலி

நாய்களுடன் நீச்சல் அடித்தவர் ஆற்றில் மூழ்கி பலி

ADDED : செப் 13, 2025 02:22 AM


Google News
நாகர்கோவில்:மார்த்தாண்டம் அருகே வளர்ப்பு நாய்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற இன்ஜினியர் நீச்சலடித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார். எஜமானன் மூழ்கிய இடத்தில் ஒரு நாய் குரைத்தபடியே நீந்திக் கொண்டிருந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் கிருபா 39. கம்ப்யூட்டர் இன்ஜினியர். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருமணம் ஆகவில்லை. இரண்டு விலை உயர்ந்த நாய்களை வளர்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ஸ்டாலின் கிருபா, நாய்களையும் அழைத்து வந்திருந்தார்.

நேற்று முன்தினம் நாய்களுடன் அங்குள்ள ஆற்றில் குளிக்கச் சென்றார்.

ஒரு நாய் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று நீச்சல் அடித்த போது அதனுடன் ஸ்டாலின் கிருபாவும் நீச்சல் அடித்தார். ஒரு கட்டத்தில் திடீரென்று அவர் தண்ணீரில் மூழ்கினார். எஜமானனை காணாத நாய் அந்தப் பகுதியில் நீந்திய படியே குரைத்துக் கொண்டிருந்தது. மற்றொரு நாய் நீத்திவந்து கரையில் நின்றபடி குரைத்தது.

தீணைப்புவீரர்கள் ஆற்றின் உள்ளே நாய் குரைத்து கொண்டிருந்த பகுதியில் தேடிய போது மூழ்கி பலியான ஸ்டாலின் கிருபா உடல் கிடைத்தது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us