/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ அரசு ஊழியர் மீது புகார் கூறி விதவை பெண் தற்கொலை அரசு ஊழியர் மீது புகார் கூறி விதவை பெண் தற்கொலை
அரசு ஊழியர் மீது புகார் கூறி விதவை பெண் தற்கொலை
அரசு ஊழியர் மீது புகார் கூறி விதவை பெண் தற்கொலை
அரசு ஊழியர் மீது புகார் கூறி விதவை பெண் தற்கொலை
ADDED : செப் 17, 2025 03:54 AM
நாகர்கோவில்:அரசு ஊழியர் மீது புகார் தெரிவித்து, விதவை பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கூடை துாக்கியை சேர்ந்தவர் ரமணி, 41. இவரது கணவர் இறந்துவிட்டார். 15 வயது மகள் உள்ளார். அவர், நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குலசேகரம் போலீசார் விசாரித்தனர்.
ரமணி தன் தந்தை ஜார்ஜுக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் கூறியிருப்பதாவது:
அரசின் கருணை வேலை கேட்டு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தேன். அந்த பிரிவில் பணிபுரியும் ஊழியர், என்னிடம் அன்பாக பேசி திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டினார். இதை நம்பி, அவரிடம் நகை, பணம் கொடுத்தேன். அவர் என்னை ஏமாற்றி, வேறு பெண்ணை திருமணம் செய்தார். கேட்டபோது, அவரது உறவினர்கள் அவமானப்படுத்தினர். மனவேதனையில் தற்கொலை செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட அரசு ஊழியரிடம் விசாரிக்கின்றனர்.