ADDED : ஜூன் 19, 2025 01:51 AM
கரூர், கரூர் மாவட்ட இந்திய கம்யூ., கட்சியின், 10 வது மாவட்ட மாநாடு, மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமையில், தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
அதில், வரும் சட்டசபை தேர்தலில் இ.கம்யூ., கட்சியின் செயல்பாடுகள், தேர்தலுக்கான செயல் திட்டங்கள் குறித்து, திருப்பூர் எம்.பி., நாட்ராயன் பேசினார். மாநாட்டில், தேசிய கட்டுபாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட துணை செயலாளர்கள் மோகன்குமார், சண்முகம், பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் ரத்தினம், வடிவேலன், கலாராணி உள்பட, பலர் பங்கேற்றனர்.