ADDED : செப் 26, 2025 01:47 AM
கரூர், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு, சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை, 4:00 முதல், 4:30 மணி வரை கரூர் நகர், புலியூர், வெண்ணைமலை, தொழிற்பேட்டை, கொளந்தானுார், வெள்ளியணை, தான்தோன்றிமலை, அரசு காலனி, காந்தி கிராமம், ராமானுார், சுக்காலியூர், செல்லாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், இடியுடன் கூடிய மழை பெய்தது.கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந் நிலையில், நேற்று மாலை பெய்த மழையுடன், குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.