Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பிளாஸ்டிக் கழிவுகளால் கடும் துர்நாற்றம்

பிளாஸ்டிக் கழிவுகளால் கடும் துர்நாற்றம்

பிளாஸ்டிக் கழிவுகளால் கடும் துர்நாற்றம்

பிளாஸ்டிக் கழிவுகளால் கடும் துர்நாற்றம்

ADDED : செப் 26, 2025 01:46 AM


Google News
கிருஷ்ணராயபுரம், ஞ்சாலை பாலம் அருகில் அதிகமான பிளாஸ்டிக் கழிவு குப்பைகள் கொட்டப்படுவதால், அந்த இடம் முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டியில் நெடுஞ்சாலை பாலம் உள்ளது. இதன் அருகில் குளமும் உள்ளது.

இந்நிலையில், பாலத்தின் கீழ்புறம் பிளாஸ்டிக் கழிவு குப்பைகள் அதிகமாக கொட்டப்படுகிறது. மேலும் காற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் பறந்து, அருகில் உள்ள விளை நிலங்களில் விழுகிறது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பாலத்தின் கீழ் புறத்தில் கொட்டப்பட்ட கழிவு குப்பைகளை அகற்றி விட்டு, மாற்று இடத்தில் குப்பை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us