Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து அபாயம்

சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து அபாயம்

சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து அபாயம்

சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து அபாயம்

ADDED : ஜூன் 28, 2024 01:56 AM


Google News
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, வாகனங்களை சாலையில் நிறுத்துவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கந்தம்பாளையம் பகுதியில், மருத்துவமனைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்நிலையில், கந்தம்பாளையம் பகுதியில், சாலையையொட்டி வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை டிரைவர்கள், பலமணி நேரம் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். மேலும், கந்தம்பாளையம் பகுதி அரசு மற்றும் தனியார் பஸ்கள், சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடுடன் டிராக்டர்களும் சென்றபடி உள்ளது. இதனால், அந்த பகுதியில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறு சிறு விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, கந்தம்பாளையம் பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல், மாற்று இடத்தை தேர்வு செய்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் வேலாயுதம்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us