Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தவிட்டுப்பாளையம் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா

தவிட்டுப்பாளையம் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா

தவிட்டுப்பாளையம் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா

தவிட்டுப்பாளையம் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா

ADDED : செப் 12, 2025 02:12 AM


Google News
கரூர், கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை தவிட்டுப்பாளையம், மண்மங்கலம், செம்மடை, பெரிச்சு

பாளையம், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டி பிரிவு, வீரராக்கியம் பிரிவு பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், அந்த பகுதிகளில் மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல முறை சாலை மறியல் போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த, 20 ஆண்டுகளில் ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்றால், மேம்பாலம் கட்டப்படும் என உறுதியளித்தனர்.

தற்போது, கரூர்-மதுரை தேசிய நெடுஞ் சாலையில் பெரிச்சுபாளையம், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, செம்மடை, மண்மங்கலம், தவிட்டுப்பாளையம் ஆகிய பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு, தற்போது பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.

அதில், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை நாமக்கல் மாவட்ட எல்லையான, தவிட்டுப்பாளையம் பகுதியில், உயர்மட்ட மேம்பாலத்தில், மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில் உயர் மட்ட பாலத்தில், செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில்

சிக்குகின்றனர்.

எனவே, கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை தவிட்டுப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தில், மின் விளக்குகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us