Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தி.மு.க., அரசுக்கு எதிரான கருத்து அதிகரித்து வருகிறது; ஜி.கே.வாசன்

தி.மு.க., அரசுக்கு எதிரான கருத்து அதிகரித்து வருகிறது; ஜி.கே.வாசன்

தி.மு.க., அரசுக்கு எதிரான கருத்து அதிகரித்து வருகிறது; ஜி.கே.வாசன்

தி.மு.க., அரசுக்கு எதிரான கருத்து அதிகரித்து வருகிறது; ஜி.கே.வாசன்

ADDED : டிச 01, 2025 02:25 AM


Google News
கிருஷ்ணகிரி: ''தமிழகத்தில், தி.மு.க., அரசுக்கு எதிரான கருத்துகள் அதிக-ரித்து வருகிறது,'' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

கிருஷ்ணகிரியில் த.மா.கா., மாவட்ட நிர்வாகி இல்ல திரும-ணத்தில் கலந்து கொள்ள, நேற்று காலை வந்தவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு, புயல் சின்னம் காரணமாக காற்று மழையில் இருந்து மக்களை காப்பாற்றக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு கட்சியில் இருந்து இன்-னொரு கட்சியில் சேரும் சூழல், தேர்தல் காலங்களில் வழக்கமாக இருக்கிறது. இப்போதுள்ள அரசியல் களம், அரசியல் நிலை, எங்-களது கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரித்து கொண்டிருக்கி-றது. காரணம் அ.தி.மு.க., பொது செயலாளரின் சுற்றுப்பயணம், தி.மு.க., ஆட்சியின் தவறான செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்றவற்றால், அரசுக்கு எதிரான வாக்கு, இந்த தேர்தலில் அதிகரிக்கும் என நம்புகிறோம்.தமிழகத்தில் என்.டி.ஏ., கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரும் வாய்ப்புள்ளது. இந்திய அளவில் மக்கள் செல்வாக்கை காங்., கட்சி இழந்து கொண்டிருக்கிறது.

இதற்கு பீஹார் தேர்தல் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us