Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ரூ.1.72 கோடியில் சாலைப்பணி அமைச்சர் துவக்கி வைப்பு

ரூ.1.72 கோடியில் சாலைப்பணி அமைச்சர் துவக்கி வைப்பு

ரூ.1.72 கோடியில் சாலைப்பணி அமைச்சர் துவக்கி வைப்பு

ரூ.1.72 கோடியில் சாலைப்பணி அமைச்சர் துவக்கி வைப்பு

ADDED : டிச 01, 2025 02:25 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட் டம், வேப்பனஹள்ளி - குப்பம் சாலையில், நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராமபுற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 1.72 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, உணவு மற்றும் உணவுப்-பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்-தனர். பின்னர், அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது: இச்சாலை, வேப்பனஹள்ளியிலிருந்து அரியனப்பள்ளி வழியாக ஆந்திர மாநில எல்லையை இணைக்கும் முக்கிய சாலையாக உள்-ளது. இச்சாலையை மேம்படுத்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். பெங்களூரு, ஓசூர், சூளகிரி, பேரிகை, அத்திமுகம் போன்ற பகுதி மக்கள் ஆந்திர மாநிலம் குப்பம் ரயில்‍வே ஸ்டேஷன் மற்றும் திருப்பதிக்கு செல்ல இச்சா-லையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், ஆந்திர மாநில எல்லையான அரியனப்பள்ளி, தளிகோட்டூர், கொங்கனப்-பள்ளி கூட்டுச்சாலை பகுதியில் விளையும் ராகி, சிறுதானியங்கள், காய்கறிகள், வேப்பனஹள்ளி, சூளகிரி, ஓசூர் பகுதிகளுக்கு நாள்-தோறும் எடுத்து செல்லும் விவசாயிகளும், சிரமமின்றி பயணம் மேற்கொள்ள இச்சாலைப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் ரேணுகாதேவி, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், தாசில்தார் ரமேஷ், உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us