/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கால்நடைகளை கடித்து குதறும் தெருநாய்களால் மக்கள் அதிர்ச்சி கால்நடைகளை கடித்து குதறும் தெருநாய்களால் மக்கள் அதிர்ச்சி
கால்நடைகளை கடித்து குதறும் தெருநாய்களால் மக்கள் அதிர்ச்சி
கால்நடைகளை கடித்து குதறும் தெருநாய்களால் மக்கள் அதிர்ச்சி
கால்நடைகளை கடித்து குதறும் தெருநாய்களால் மக்கள் அதிர்ச்சி
ADDED : ஜூன் 02, 2025 03:28 AM
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, வீட்டில் வளர்க்கும் கால்நடை-களை தெருநாய்கள் கடித்து குதறி வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பென்-னங்கூர் கிராமத்தில், 3 மாட்டிறைச்சி கடைகள் உள்ளன. இங்கு வீணாகும் மாட்டிறைச்சிகள் தெருநாய்களுக்கு உணவாக சாலை-யோரம் வீசப்படுகின்றன. அவற்றை சாப்பிடுவதற்காக, பென்-னங்கூர் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்தி-ரிகின்றன.இவை, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சிறுவர் மற்றும் கால்நடைகளை கடித்து குதறி வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பென்னங்கூரை சேர்ந்த கண்ணம்மா என்பவரது கன்றுக்-குட்டி, கோபால், கிருஷ்ணாரெட்டி, அசோக் ரெட்டி மற்றும் லட்-சுமணன் ஆகியோரது வீடுகளில் வளர்க்கும் ஆடுகள், கோழி-களை கடித்து குதறியுள்ளன.
இதில் ஆடுகள் மற்றும் கன்றுக்குட்டி பலத்த காயமடைந்தன. மாட்டிறைச்சி கிடைக்காத நேரங்களில், கால்நடைகளை தாக்கு-வதை தெருநாய்கள் வழக்கமாக கொண்டுள்ளன. அதனால், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்க்கும் விவசாயிகள், பொது-மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெருநாய்கள் தொல்லையால் கால்நடைகளை வளர்க்கவே அச்சப்படுகின்றனர்.
எனவே பஞ்., நிர்வாகம், தெருநாய்களை பிடித்து, அவற்றுக்கு அறுவை சிகிச்சை செய்து, அதன் பெருக்கத்தை குறைக்க, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.