Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் போலீசார்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் போலீசார்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் போலீசார்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் போலீசார்

ADDED : ஜூன் 02, 2025 03:30 AM


Google News
சூளகிரி: கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஒங்கசந்திரா பகுதியை சேர்ந்-தவர் பிரகாஷ் மகன் கணேஷ், 23. இவரும், அவரது நண்பர்க-ளான ராகுல், ஸ்ரீதர், சரண், சந்தோஷ் ஆகியோரும், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உலகம் அருகே, கூட்டூர் பகுதியில், தென்பெண்ணை ஆறு பாறையில் பாய்தோடி அருவி போல் ஓடு-வதை, இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் பார்த்தனர். அதனால் அதை நேரில் பார்க்க, நேற்று காலை, 10:30 மணிக்கு கணேஷ் உட்பட, 4 பேரும் உலகம் பகுதிக்கு சென்று பார்த்தனர்.

அங்கு, பாறை வழுக்கியதில், ஆற்றில் விழுந்த கணேஷ், நீரில் அடித்து செல்லப்பட்டார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடி-யவில்லை. சூளகிரி போலீசார், ஓசூர், ராயக்கோட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து, நேற்று மாலை வரை ஆற்றில் கணேஷை தேடும் பணி நடந்தது. ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சூளகிரி போலீசார் விசாரிக்கின்-றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us