ADDED : ஜூன் 13, 2024 06:30 AM
மேலுார்: மேலவளவில் போலீசாக பணியாற்றியவர் ஜெயக்குமார் 45, இவருக்கும் கீழவளவை சேர்ந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
ஏப். 27ல் தன்னுடன் பழகிய பெண்ணின் மகளை, ஜெயக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். குழந்தைகள் நல அலுவலர் ஆஷா, மகளிர் போலீசில் அளித்த புகாரில் ஜெயக்குமார் மீது போக்சோ வழக்கு பதிந்தனர். ஏற்கனவே எஸ்.பி., அரவிந்த், அவரை சஸ்பெண்ட் செய்த நிலையில், மேலுார் மகளிர் போலீசில் ஜெயக்குமார் சரணடைந்தார்.