
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் அமைந்துள்ள அழகு முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா நடந்தது.
முதல் நாள் பக்தர்கள் அம்மனுக்கு கரகம் எடுத்து பொங்கல், மாவிளக்கு வைத்தனர். 2ம் நாள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று சக்தி கிடா வெட்டுதல் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும்.