Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 4 மாதங்களில் பள்ளமாகி பல்லை காட்டியது ரோடு

4 மாதங்களில் பள்ளமாகி பல்லை காட்டியது ரோடு

4 மாதங்களில் பள்ளமாகி பல்லை காட்டியது ரோடு

4 மாதங்களில் பள்ளமாகி பல்லை காட்டியது ரோடு

ADDED : ஜூன் 14, 2024 05:07 AM


Google News
கொட்டாம்பட்டி: கருங்காலக்குடியில் நான்கு வழிச்சாலையில் புதிதாக கட்டிய பாலத்தில் அமைத்த சாலை நான்கே மாதங்களில் பழுதானதால் பாதுகாப்பான போக்குவரத்து கேள்விக்குறியாகி வருகிறது.

கருங்காலக்குடியில் நான்கு வழிச்சாலையின் ஒரு புறம் 15 கிராமங்களும், மறுபுறம் பள்ளி, அரசு மருத்துவமனை மற்றும் கால்நடை மருத்துவமனை போன்றவையும் உள்ளன. மக்கள் தங்களின் தேவைகளுக்காக நான்கு வழிச்சாலையை கடக்க முயலும் போது நுாற்றுக்கும் மேற்பட்டோர் விபத்தில் இறந்துள்ளனர். அதனால் பாலம் கட்ட துவங்கி மூன்றாண்டுகளாக பணிகள் நடந்தன. லோக்சபா தேர்தலுக்கு முன்பு அவசர அவசரமாக பாலம் திறக்கப்பட்டது. நான்கே மாதத்தில் பாலத்தில் பள்ளம் ஏற்பட்டு ஒட்டு போடப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் கூறியதாவது: ரூ.19 கோடியில் புதிய பாலம் கட்டி அதன் மீது அமைத்த நான்கு வழி சாலையை பிப். 13ல் மதுரை எம்.பி., வெங்கடேசன் திறந்து வைத்தார். நான்கே மாதங்களில் அந்த சாலையில் பள்ளம் உருவாகி, தினமும் வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். பத்திரிகையாளர்கள் இதனை படம் எடுத்ததும், பள்ளத்தில் தார் ஊற்றி ஒட்டு போட்டனர். அவசர கதியில் பணிசெய்ததால் தார் மற்றும் கலவையை முழுமையாக பள்ளத்தில் ஊற்றவில்லை. மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இதனால் பாலத்தின் தரமும் கேள்விக்குறியாகி உள்ளது. தரமான ரோடு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us