Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரோடு, சமுதாய கூடம் அமைக்க பூமி பூஜை

ரோடு, சமுதாய கூடம் அமைக்க பூமி பூஜை

ரோடு, சமுதாய கூடம் அமைக்க பூமி பூஜை

ரோடு, சமுதாய கூடம் அமைக்க பூமி பூஜை

ADDED : அக் 06, 2025 04:07 AM


Google News
வாடிப்பட்டி : பரவை பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் மெயின் ரோடு முதல் வைகை ஆற்றுக்கு செல்லும் ரோட்டில் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.

அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், நகர செயலாளர் ராசாமணி முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ஜீலான் பானு வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சிறைச்செல்வன், ஜெயராமன், மாவட்ட பிரதிநிதி மணி, பகுதி செயலாளர் மருது பாண்டியன் பங்கேற்றனர்.

வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மில் காலனி செல்வ விநாயகர், மற்றும் அண்ணா நகர் காளியம்மன் கோயில்கள் முன் அமைக்கப்பட்ட தகர கூரைகளை அமைச்சர் திறந்து வைத்தார்.

* சோழவந்தான் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ராயபுரம் மந்தையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைத்தல், நாச்சிகுளத்தில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமையில் நடந்தது.

பி.டி.ஓ., கிருஷ்ணவேணி, உதவி பொறியாளர்கள் மாலதி, லியோ தி.மு.க., ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், துணைச் செயலாளர் சிறுமணி, விவசாய அணி பாஸ்கரன், நிர்வாகிகள் பால்கண்ணன், கதிரவன், சவுந்தரபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us