ADDED : ஜூன் 28, 2024 02:02 AM
மோகனூர், -நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில், என்.புதுப்பட்டி பகுதியில் இருந்து தனியார் கோழிப்பண்ணைக்கு செல்லும் பாதை அருகில், புள்ளிமான் ஒன்று அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த, நாமக்கல் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளிமானை மீட்டனர். உடல் பகுதியில் ரத்த காயம் இருந்ததால், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். மேலும், பிரேத பரிசோதனைக்காக மானை வனத்துறையினர் எடுத்துச்சென்றனர்.