Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'புதிய சாலை அமைத்து 20வது நாளில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டுகின்றனர்'

'புதிய சாலை அமைத்து 20வது நாளில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டுகின்றனர்'

'புதிய சாலை அமைத்து 20வது நாளில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டுகின்றனர்'

'புதிய சாலை அமைத்து 20வது நாளில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டுகின்றனர்'

ADDED : ஜூன் 29, 2024 02:57 AM


Google News
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாதாரண கூட்டம், நகராட்சி கூட்ட அரங்கில், தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடந்தது. கமிஷனர் சேகர், பொறியாளர் சரவணன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

மாதேஸ்வரன், தி.மு.க.,: குப்பையை சேகரித்து வைக்க இடமில்லாததால், துாய்மை பணியாளர்கள் சரியாக குப்பையை வாங்க வருவதில்லை. குரங்கு தொல்லை அதிகம் உள்ளது. பலமுறை புகார் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகராட்சி நினைத்தால், ஒரே நாளில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்.

ராஜவேல், அ.தி.மு.க.,: கோழிக்கடை கழிவுகளை சாக்கடைகளில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இவைகளை வாங்கி எரித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேகர், கமிஷனர்: குப்பை எரிக்க, ஆறு மாத காலத்திற்குள் இயந்திரம் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஐந்து இடங்களில் குப்பை பிரிக்கும் மையம் வைக்கப்பட்டுள்ளது. குப்பையை வாங்குபவர்கள் எரிக்க கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினேஷ், பா.ஜ.,: குப்பையை எடுத்து செல்லாமல் தேங்கி கிடக்கிறது. பெரிய வார்டு, ஒரே ஒரு பேட்டரி வாகனம் மட்டுமே உள்ளது. கூடுதலாக இன்னொரு பேட்டரி வாகனம் வழங்க வேண்டும். சாக்கடைகளில் உறிஞ்சு வாகனம் வைத்து, கழிவுநீர் அகற்றப்படாமல் கொசு தொல்லை அதிகளவில் உள்ளது.

கமிஷனர்: இன்னும் ஒரு வார காலத்திற்குள் உறிஞ்சு வாகனம், நகராட்சிக்கு வந்துவிடும். அதுவரை தற்காலிகமாக உள்ள வாகனத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தப்படும்.

ரவிக்குமார், தி.மு.க.,: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 20 நாட்களுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், அதற்குள், உப்பு நீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டி வருகின்றனர். சாலை அமைத்தும் பயனில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us