/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தேங்காய் பருப்பு கிலோவுக்கு ரூ.2 உயர்வு தேங்காய் பருப்பு கிலோவுக்கு ரூ.2 உயர்வு
தேங்காய் பருப்பு கிலோவுக்கு ரூ.2 உயர்வு
தேங்காய் பருப்பு கிலோவுக்கு ரூ.2 உயர்வு
தேங்காய் பருப்பு கிலோவுக்கு ரூ.2 உயர்வு
ADDED : ஜூன் 28, 2024 01:16 AM
ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில், நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.
ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வந்தனர். நேற்று தேங்காய் பருப்பு கிலோவுக்கு, 2 ரூபாய் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடத்த வாரம் நடந்த தேசிய வேளாண்மை சந்தையில் ஏலத்திற்கு, 5,340 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். நேற்று நடந்த ஏலத்திற்கு, 12 ஆயிரத்து, 589 கிலோ கொண்டு வந்தனர்.
இதில் அதிகபட்சமாக கிலோ, 94.29, குறைந்தபட்சமாக, 90.69, சராசரியாக, 93.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 12 லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை விட கிலோவுக்கு, 2 ரூபாய் கூடுதலாக கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.