ADDED : ஜூன் 30, 2024 01:44 AM
ராசிபுரம், ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது.
இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 108.360 கிலோ விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 450 ரூபாய், குறைந்தபட்சம், 323 ரூபாய், சராசரி, 368.23 ரூபாய் என, 40,000 ரூபாய்க்கு விற்பனையானது.