Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

ADDED : மே 14, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தர்மருக்கு 60, இருபதாண்டுகள் சிறை தண்டனை, ரூ.6000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கமுதி அருகேவுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த தர்மர் கடந்த 2022 ஏப்., 25ல் பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமியின் பெற்றோர் புகாரில் தர்மரை கமுதி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

இவ்வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தர்மருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.3000 அபராதமும், பெண் குழந்தை வன்கொடுமை போக்சோவில் 20 ஆண்டுகள் சிறை, ரூ.3000 அபராதமும் கட்டத்தவறினால் ஒரு வாரம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார். சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் கீதா ஆஜரானார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us