Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கோழித் தீவனமாகும் காரல் மீன்கள்; ராமேஸ்வரத்தில் டன் கணக்கில் சிக்கின

 கோழித் தீவனமாகும் காரல் மீன்கள்; ராமேஸ்வரத்தில் டன் கணக்கில் சிக்கின

 கோழித் தீவனமாகும் காரல் மீன்கள்; ராமேஸ்வரத்தில் டன் கணக்கில் சிக்கின

 கோழித் தீவனமாகும் காரல் மீன்கள்; ராமேஸ்வரத்தில் டன் கணக்கில் சிக்கின

ADDED : டிச 05, 2025 02:51 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களின் வலையில் டன் கணக்கில் சிக்கிய காரல் மீன்கள் கோழி தீவனத்திற்கு செல்வதால் உரிய விலை கிடைத்தது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

'டிட்வா' புயலுக்கு பிறகு நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கம் போல் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினர். இதில் பெரும்பாலான படகில் காரல் மீன்கள் டன் கணக்கில் சிக்கியது.

இம்மீன்களை மீனவர்கள் ஐஸ்சில் பதப்படுத்தாமல் கொண்டு வந்ததால், ராமேஸ்வரம் கருவாடு வியாபாரிகள் வாங்கி துாத்துக்குடிக்கு அனுப்பினர். அங்குள்ள அரவை ஆலையில் மீனில் இருந்து எண்ணெய்யை பிரித்து எடுத்து மீதமுள்ள சக்கையை பவுடராக்கி கோழி தீவனத்தில் கலந்து கொடுப்பார்கள்.

இதனால் இம்மீன்களுக்கு கிராக்கி அதிகம் என்பதால் நேற்று கிலோ ரூ.15 முதல் ரூ. 20வரை வியாபாரிகள் வாங்கினர். உரிய விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us