Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சான்றிதழ் வழங்க லஞ்சம் தாசில்தார், டிரைவர் கைது

சான்றிதழ் வழங்க லஞ்சம் தாசில்தார், டிரைவர் கைது

சான்றிதழ் வழங்க லஞ்சம் தாசில்தார், டிரைவர் கைது

சான்றிதழ் வழங்க லஞ்சம் தாசில்தார், டிரைவர் கைது

ADDED : செப் 25, 2025 12:44 AM


Google News
இடைப்பாடி:சேலம் மாவட்டம் இடைப்பாடி, கோரணம்பட்டியை சேர்ந்த, விவசாயி தமிழரசன், 55. சேலம் நில எடுப்பு தனி தாசில்தார் கோவிந்தராஜு, 43, என்பவரிடம், விண்ணப்பம் கொடுத்து, நிலத்துக்கு தடையில்லா சான்று கோரினார். அதற்கு அவர், 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். பின் கோவிந்தராஜுவின் நண்பரான, இடைப்பாடி தாசில்தார் அலுவலக ஜீப் டிரைவர் வெங்கடாசலம், 50, மூலம் பேரம் பேசி, 5,000 ரூபாய் கொடுக்க, தமிழரசன் ஒப்புக்கொண்டார். பின் தமிழரசன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.

அவர்கள் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய, 5,000 ரூபாயை தமிழரசன், நேற்று இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் இருந்த வெங்கடாசலத்திடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார், வெங்கடாசலத்தை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த தனி தாசில்தார் கோவிந்தராஜுவையும், போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us