ADDED : அக் 24, 2025 01:27 AM
எருமப்பட்டி, அஎருமப்பட்டி யூனியன் வடவத்துார் பஞ்., தலைமலை அடிவாரத்தில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில், 1,000 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் தலைமை வகித்தார். வேப்பம், புங்கன், அரச உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த மரங்கள் நடவு செய்யப்பட்டன. உதவி பொறியாளர் சிம்லா, பி.டி.ஓ., பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


