ADDED : ஜூன் 02, 2024 03:44 AM
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கோவிலுார் சங்கன்திடலை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் விக்னேஷ் 28.
இவர் நங்கம்பட்டிக்கு கோயில் விழாவிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து புறப்பட்டு திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சென்ற போது பைக் விபத்திற்குள்ளானது. இதில் விக்னேஷ் பலியானார். விக்னேஷ் மனைவி நித்யா புகாரின் பேரில் செட்டிநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.