/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ 40 ஆயிரம் பனை விதை 200 பனை கன்று நடத்திட்டம் 40 ஆயிரம் பனை விதை 200 பனை கன்று நடத்திட்டம்
40 ஆயிரம் பனை விதை 200 பனை கன்று நடத்திட்டம்
40 ஆயிரம் பனை விதை 200 பனை கன்று நடத்திட்டம்
40 ஆயிரம் பனை விதை 200 பனை கன்று நடத்திட்டம்
ADDED : செப் 24, 2025 08:28 AM
சிவகங்கை: நடப்பாண்டு சிவகங்கை மாவட்டத்தில் 40 ஆயிரம் பனை விதைகள், 200 பனை கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தோட்டக்கலை துணை இயக்குனர் சத்தியா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பனை மரம் பாரம்பரியத்தின் அடையாளம். கற்பகத்தரு என்ற பெயர் உண்டு.
புயல், கடுமையான வானிலையை தாங்கும் திறன் உண்டு. இதன் வேர் நீரை தக்க வைக்கும் தன்மை கொண்டது.
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதுடன், நீர் பற்றாக்குறையை போக்கும். பனை மரத்தில் இருந்து பல்வேறு உணவு பொருட்கள் கிடைக்கின்றன. குறிப்பாக பதநீர், கருப்பட்டி, வெல்லம், பனங்கற்கண்டு,மிட்டாய், பனங்கூழ் கிடைக்கின்றன. தமிழகத்தில் 5 கோடி பனை மரங்கள் உள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் 35 எக்டேரில் பனை மரங்கள் உள்ளன. தோட்டக்கலை மலைபயிர்கள் துறை மூலம் கடந்த 3 ஆண்டாக பனை மேம்பாட்டு இயக்க திட்டம் மூலம் 1.20 லட்சம் பனை விதைகள், 600 பனை கன்றுகள் அனைத்து ஒன்றியங்களிலும் நடப்பட்டுள்ளது. 2025- 2026 ம் ஆண்டிற்கு 40 ஆயிரம் பனை விதைகள், 200 பனை கன்றுகள் நட இலக்கு வைத்துள்ளோம்.
பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கலெக்டர் தலைமையில் வட்டார அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்துள்ளோம். எனவே பனை மரங்களை கலெக்டரிடம் அனுமதி பெற்றே வெட்ட வேண்டும்.
மேலும் விபரம் வேண்டுவோர் அந்தந்த தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்றார்.