Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கை மாவட்ட கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்

சிவகங்கை மாவட்ட கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்

சிவகங்கை மாவட்ட கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்

சிவகங்கை மாவட்ட கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்

ADDED : செப் 24, 2025 08:37 AM


Google News
Latest Tamil News
திருப்புத்துார் : திருப்புத்துார் கோயில்களில் நேற்று நவராத்திரி விழா துவங்கியது. கொலு அலங்காரத்தை பக்தர்கள் ஆர்வமாக பார்வையிட்டனர்.

பூமாயி அம்மன் கோயிலில் 34 ஆண்டுகளாக நவராத்திரி விழா நடத்தப்படுகிறது. நேற்று மாலை 6:00 மணிக்கு மூலவர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொலு மண்டபத்தில் அலங்காரத்தில் உற்ஸவ அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 7:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கியது. இன்று முதல் தினசரி மாலை 5:00 மணிக்கு லட்சார்ச்சனை நடைபெறும். அக்.2 இரவு 8:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழந்தருளி அம்பு எய்தல் நடைபெறும்.

*திருத்தளிநாதர் கோயிலில் நேற்று திருநாள் மண்டபத்தில் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்ட கொலு அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசித்தனர்.கொலு மண்டபத்தில் மாலையில் உற்ஸவ அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி இரவு 7:45 மணி அளவில் தீபாராதனை நடந்தது. அக்.2 மாலையில் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளிஅம்பு எய்தல், திருவீதி உலா நடைபெறும்.

*நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் கொலு அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் நேற்று மாலை துவங்கியது. மகாலெட்சுமி உற்ஸவர் அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது.

*ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயிலில் செப்.21 ல் காப்புக்கட்டி நவராத்திரி விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி உற்ஸவ அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி இரவு 7:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us