/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சொத்து வரி கட்டாவிட்டால் நடவடிக்கை: சிவகங்கை நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கைசொத்து வரி கட்டாவிட்டால் நடவடிக்கை: சிவகங்கை நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை
சொத்து வரி கட்டாவிட்டால் நடவடிக்கை: சிவகங்கை நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை
சொத்து வரி கட்டாவிட்டால் நடவடிக்கை: சிவகங்கை நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை
சொத்து வரி கட்டாவிட்டால் நடவடிக்கை: சிவகங்கை நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஜூலை 30, 2024 05:42 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் சொந்த கட்டடங்களில் வசித்து வருபவர், வணிகம் செய்து வருபவர்கள் முறையாக சொத்து வரி செலுத்தாவிட்டால் கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்கப் போவதாக நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் தெரிவித்தார்.
சிவகங்கை நகராட்சியில் பல ஆண்டுகளாக வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் வரி கட்டாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.
சிவகங்கை நகராட்சியில் 18 ஆயிரத்து 131 சொத்துக்களுக்கு 3 கோடியே 16 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் வரி பாக்கியுள்ளது. இதில் நீண்ட நாட்களாக வரி கட்டாமல் உள்ளவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 1994 முதல் தற்போது வரை ஒருவர் மட்டும் 8 லட்சத்து 10 ஆயிரத்து 412 ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளார். இதேபோல் பல சொத்துகளுக்கு வரி பாக்கியுள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் வரி கட்டாமல் இழுத்தடிப்பு செய்துவருகின்றனர்.
நிலுவையில் உள்ள வரிகளை உரியவர்களிடம்கட்ட அறிவுறுத்தியும் கட்டுவதில்லை. வரி கட்டாதவர்கள் சொத்துக்களான வீடுகள் முன் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் செலுத்தாவிட்டால் இந்த சொத்தை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற நோட்டீசை நகராட்சி ஊழியர்கள் ஒட்டுகின்றனர்.
அப்போதும் கட்டத்தவறிய உரிமையாளர்மீது நகராட்சி நிர்வாகம் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றனர்.
நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், நகராட்சியில் நீண்ட காலமாக பலமுறை அறிவுறுத்தியும் சொத்து வரி கட்டாத சொத்தின் உரிமையாளருக்கு முதற்கட்டமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்படஉள்ளது. அதன் பின்பும்கட்ட தவறினால் முறையான நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்டு சொத்து வரியை வசூல் செய்ய உள்ளோம், என்றார்.