ADDED : ஜூலை 30, 2024 05:40 AM
காரைக்குடி : ஆடி கிருத்திகையை முன்னிட்டு குன்றக்குகை சண்முகநாதப் பெருமானுக்கு காலையில் சந்தன திருமுழுக்காட்டு நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து மாலையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில்படிபூஜை பூச்சொரிதல்நிகழ்ச்சி நடந்தது. குன்றக்குடி அடிவாரத்தில் படி பூஜை தொடங்கி படி முழுவதும் சூடம் ஏற்றி பூக்கள் வைத்தும் பூஜை நடந்தது.
திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இரவு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது.