/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மகளிர் குழுவிற்கு ரூ.72.24 கோடி கடன் மகளிர் குழுவிற்கு ரூ.72.24 கோடி கடன்
மகளிர் குழுவிற்கு ரூ.72.24 கோடி கடன்
மகளிர் குழுவிற்கு ரூ.72.24 கோடி கடன்
மகளிர் குழுவிற்கு ரூ.72.24 கோடி கடன்
ADDED : ஜூன் 12, 2025 02:06 AM

சிவகங்கை: சிவகங்கையில் நடந்த மகளிர் குழு கடனுதவி வழங்கும் விழாவில், 843 கூட்டமைப்பிற்கு ரூ.72.24 கோடி கடனை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
சிவகங்கை மாவட்ட மகளிர் திட்டம், கூட்டுறவு துறை சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மகளிர் திட்ட அலுவலர் கவிதப்பிரியா வரவேற்றார். தமிழரசி எம்.எல்.ஏ., கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி, முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், மாவட்ட செயல் அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம்) ஆதித்யா மேனன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உட்பட உதவி திட்ட அலுவலர்கள் சின்னதுரை, தேன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் 703 மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டமைப்பை சேர்ந்த 843 உறுப்பினர்களுக்கு ரூ.72.24 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. குறிப்பாக கூட்டுறவு வங்கிகள் மூலம் 191 மகளிர் குழுக்களுக்கு ரூ.19.25 கோடி கடனுதவிகள் வழங்கினர். உதவி திட்ட அலுவலர் மரியா நன்றி கூறினார். மகிளர் குழுக்கள் சார்பில் அமைக்கப்பட்ட உணவு பொருள், மதிப்பு கூட்டிய பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். பின்னர் ஜூன் 17 ல் துணை முதல்வர் உதயநிதி நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிற்கான மேடை அமைய உள்ள கலெக்டர் அலுவலக பின்புற திடலில் அமைச்சர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.