ADDED : மார் 27, 2025 02:56 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்லம்கான், 70. இவர் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த, 8 வயது சிறுமியை, தின்பண்டம் கொடுப்பதாகக் கூறி, வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை அளித்தார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, வல்லம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர் அஸ்லம்கானை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.