ADDED : ஜூலை 17, 2024 12:18 AM
பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை பாரதி நகரைச் சேர்ந்தவர் கோபால் 65. இவரது மகன் செந்தில்பாண்டி 37, ஓட்டி வந்த டூவீலரில் பின்னால் உட்கார்ந்து வந்தார்.
பாரதிநகரில் இருந்து தேனி- பெரியகுளம் ரோட்டில் உள்ள சென்டர்மீடியன் அருகே ரோட்டை கடக்க செந்தில்பாண்டி முயன்றார். அந்த வழியாக வேகமாக டூவீலரில் வந்தவர் கோபால் மீது மோதினார். இதில் காயமடைந்த கோபால், பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தென்கரை போலீசார் விபத்து ஏற்படுத்திய வடகரை மயானக்கரை தெருவைச் சேர்ந்த முகமதுஅலி ஜின்னாவிடம் 29. விசாரணை செய்து வருகின்றனர்.