Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ க.புதுப்பட்டியில் குடிநீர் வராததை கண்டித்து மறியல்

க.புதுப்பட்டியில் குடிநீர் வராததை கண்டித்து மறியல்

க.புதுப்பட்டியில் குடிநீர் வராததை கண்டித்து மறியல்

க.புதுப்பட்டியில் குடிநீர் வராததை கண்டித்து மறியல்

ADDED : ஜூன் 09, 2024 04:49 AM


Google News
கம்பம் : க.புதுப்பட்டியில் 10 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யாததை கண்டித்து பெண்கள் தேனி -- கம்பம் நெடுஞ்சாலையில் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

க.புதுப்பட்டிக்கு குடிநீர் லோயர் கேம்பிலிருந்து குடிநீர் வாரியம் மூலம் நடைபெறுகிறது. முல்லைப் பெரியாற்றில் பேரூராட்சி சார்பில் சொந்தமாக பம்பிங் செய்தும் வினியோகிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக 3 மற்றும் 4 வது வார்டுகளில் குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். நேற்று மாலை நூற்றுக்கும் மேற்பட்ட தேனி -- கம்பம் நெடுஞ்சாலையில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டி தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us