Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு

ADDED : செப் 30, 2025 05:17 AM


Google News
தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா, சில்வார்பட்டி கோம்பைபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரி 35. இதே ஊரைச் சேர்ந்த இவரது கணவர் கரியமால் 40. இவர்களுக்கு திருமணமாகி 17, 11 வயது மகள் மகன் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாட்டால் கடந்தாண்டு விவகாரத்து பெற்றனர். குழந்தைகளுக்கு ஜீவானாம்சம் தரக்கோரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் கரியமால் தூண்டுதலில் மகேஸ்வரியின் தம்பி பாலசுப்பிரமணியன், அவரது மனைவி பாண்டிசெல்வி ஆகியோர் மகேஸ்வரியை அவதூறாக பேசி, கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகேஸ்வரி அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் பாலசுப்பிரமணியன், பாண்டிசெல்வி, கரியமால் மீது வழக்கு பதிவு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us