Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ போடி பகுதியில் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

போடி பகுதியில் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

போடி பகுதியில் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

போடி பகுதியில் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : அக் 10, 2025 03:32 AM


Google News
Latest Tamil News
போடி: போடி பகுதியில் நேற்று மதியம் பெய்த கன மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து துவங்கியது.

போடி பகுதியில் சில மாதங்களாக மழை இன்றி ஆறு, கண்மாய் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து. நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், பருத்தி, தோட்ட பயிர்கள் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டு இருந்த விவசாயிகள் கலக்கத்தில் இருந்தனர். நேற்று மதியம் போடி, குரங்கணி, கொட்டகுடி, ராசிங்காபுரம், சில்லமரத்துப்பட்டி, தேவாரம் பகுதியில் பெய்த கன மழையால் வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சி அடைந்தது. போடி காமராஜர் பஜார், போஜன் பார்க் உள்ளிட்ட மெயின் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து சென்றது.

மலைப் பகுதியில் பெய்த கனமழையால் கொட்டகுடி ஆற்று பகுதியில் நீர்வரத்து வர துவங்கியது. நேற்று மதியம் 3:00 மணிக்கு மேல் பெய்ய துவங்கிய கன மழையானது 4:30 மணிக்கு மேலும் நீடித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழை அளவு விபரம்

மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆண்டிபட்டி 30.8 மி.மீ., பெரியகுளம் 14.6 மி.மீ.,மஞ்சளாறு 9 மி.மீ., சோத்துப்பாறை 6.8 மி.மீ., பெரியாறு அணை 14.4 மி.மீ., சண்முகாநதி அணை 1.6 மி.மீ., கூடலுார், வைகை அணை தலா 1.2 மி.மீ.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us